search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகள் புகார்"

    தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக தாயின் 2-வது கணவர் மீது சிறுமி கோவை துடியலூர் போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் 15 வயது சிறுமி புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது தாய்க்கு 2 கணவர்கள். தாய், 2 தந்தை மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறேன். எனது 2-வது தந்தை எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இது குறித்து எனது அம்மாவிடம் கூறியபோது அவர் 2-வது தந்தையை கண்டித்தார். இருந்தாலும் தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தார். இதனையடுத்து நான் 1098 என்ற குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு போனில் தொடர்பு கொண்டு கூறினேன். அதிகாரிகள் எனது அம்மாவிடம் விசாரணை நடத்தினர். எனது பிறந்த தேதி, ஆதார் அட்டை உள்ளிட்டவைகளை பெற்றுச்சென்றனர்.

    எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் அவர் கூறியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கும்பகோணத்தில் மகளிர்குழு பணத்தை வங்கிக்கு கட்ட சென்ற பெண் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கும்பகோணம்:

    கும்பகோணம் சிவகாமி நகரை சேர்ந்தவர் ரெங்கசாமி. இவரது மனைவி சூர்யா (வயது 23). இவர் மகளிர்குழு தலைவியாக உள்ளார்.

    கடந்த 17-ந்தேதி குழு மூலம் வசூலான ரூ.4 லட்சத்தை வங்கியில் செலுத்த சூர்யா முடிவு செய்து அதனை தனது தாய் தேவி (42) என்பவரிடம் கொடுத்து வங்கியில் கட்டி வரும்படி கூறியுள்ளார். அதனை பெற்று சென்ற தேவி மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. 

    இந்த தகவல் வெளியே தெரிந்தால் குழு உறுப்பினர்களுக்கு என்ன பதில் சொல்வது? என்று சூர்யா கலக்கமடைந்தார். ஆனாலும் தனது தாயை பற்றி தகவல் எதுவும் கிடைக்கததால் அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி நேற்று கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தேவியை தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் சூர்யா தாமதமாக புகார் செய்ததால் தேவி பணத்துடன் மாயமானது திட்டமிட்ட  நாடகமா? இதில் மோசடி எதுவும் உள்ளதா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
    ×